கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலூர் கிரானைட் குவாரி முறைகேட்டில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது,
கிரானைட் ஊழல் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றது வருகின்றது. இந்த ஊழல் காரணமாக 14 கண்மாய், 13 கால்வாய், வண்டிப்பாதை, பஞ்சமி நிலங்கள் போன்றவற்றைக் காணவில்லை.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது, மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, நான் ஆட்சிக்கு வந்தால் கிரானைட் குவாரி கொள்ளையைத் தடுப்பேன் என்றார். ஆனால் கடந்த ஓராண்டாக அவர் கிரானைட் குவாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக 19-5-2012 அன்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தான் அதிரடி நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் பிறகும் அந்த அறிக்கை மீது 2 மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஊழலில் ரூ. 35,000 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தாகும்.
இதில் தொடர்புடைய நிறுவனங்களின் உரிமத்தை ரத்துச் செய்து, அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், இந்த மெகா ஊழல் பல ஆண்டுகளாக நடைபெற்றும் அரசு தடுத்து நிறுத்தவில்லை. இதற்கு பல முக்கிய அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதால் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications