அசாம் இனமோதல் குற்றவாளிகள் யார்? துப்பு கொடுத்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்க சிபிஐ அறிவிப்பு
டெல்லி: அசாம் இன மோதல் வன்முறையில் குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிபிஐ அறிவித்துள்ளது.
அசாமில் இன மோதல் வெடித்த 3 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 7 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. அசாமின் கோக்ராஜர், சிராங் மற்றும் துப்ரி ஆகிய 3 மாவட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக இரண்டு டிஐஜிக்கள் தலைமையில் சிபிஐ விசாரணை நடத்துகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ செய்தித் தொடர்பாளர் தரினி மிஷ்ரா, இன மோதல்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோ கிளிப்பிங்குகள் இருந்தால் அவற்றை சிபிஐயிடம் ஒப்படைக்கலாம் என்றும் அப்படி தகவல் தருவோருக்கு ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக 08811099997, 08811099996 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உரிய தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
அசாமில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக போடோ இனப் பழங்குடியினருக்கும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய சிறுபான்மையினருக்கும் இடையேயான வன்முறையினால் 75க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த மோதலானது கடந்த சில நாட்களாக பெரும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கர்நாடகம், ஆந்திரம் ,தமிழகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர் பல்லாயிரக்கணக்கானோர் அடித்துப் பிடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications