சங்கரன்கோவில் அருகே ஆசிரியைகளை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் டூ மாணவர்கள் ஆசிரியைகளை செல்போனில் படம்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியம் திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வரலாற்று பிரிவு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் ஆசிரியைகளை கேலி செய்ததுடன், அவர்களை செல்போனிலும் படம் பிடித்து அத்துமீறி நடந்து கொண்டனர். இது குறித்து ஆசிரியைகள் அளித்த புகாரின்பேரில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடந்த 5ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 மாணவர்களும் பள்ளிக்கு வந்து சக மாணவர்களுடன் சேர்ந்து மீண்டும் ஆசிரியைகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது குறி்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள், உதவி தலைமை ஆசிரியை ஆனி ஜோஸ்லின் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் முறையிட்டதன்பேரில் நேற்று முன்தினம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 11 மாணவர்களும் அங்கு வந்து தங்கள் துறையைச் சேர்ந்த 36 மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.
இதனிடையே திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் டோரா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் உதவி தலைமை ஆசிரியை ஆனி ஜோஸ்லின் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications