மத்திய அரசுக்கு ஆதரவு தொடருமா?: மாயாவதி நாளை முடிவு
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதா இல்லை என்பது குறித்து நாளை முடிவு செய்யப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இவர் ஆதரவு தராவிட்டால், வெறும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் தான் மத்திய அரசு காலம் தள்ள வேண்டி வரும். அப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயமும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்து, கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சமீபத்தில் வெளியேறிவிட்டது. இதனால் 19 எம்பிக்களை இழந்து மத்திய அரசு மைனாரிட்டி அரசாகிவிட்டது.
ஆனால், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந் நிலையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முலாயமும் மாயாவதியும் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மம்தாவோ அல்லது பாஜகவோ நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், முலாயமும் மாயாவதியும் அதை ஆதரித்துவிட்டால், மன்மோகன் சிங் அரசு வீட்டுக்குப் போக வேண்டியது தான்.
ஆனால், மம்தா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர மாட்டார், கொண்டு வந்தாலும் அதை முலாயமும் மாயாவதியும் ஆதரிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் ஏதாவது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த வண்ணம் உள்ளது.
இந் நிலையில் இன்று லக்னொவில் தனது கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தான் நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஏழைகள் மீதான சுமையை பணக்காரர்கள் மீது மாற்றிவிட வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் மத்தியில் ஊழலும் மலிந்துவிட்டது. 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் என ஊழல்கள் அதிகரித்துவிட்டன.
மத்திய அரசுக்கு ஆதரவு தருவதா இல்லையா என்பது குறித்து நாளை முடிவு செய்வேன். இப்போதுள்ள நிலையில் மத்தியில் விரைவிலேயே தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பகுஜன் கட்சியில் முலாயம் கட்சி போல குடும்ப ஆதிக்கம் இருக்காது. எனது உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மாட்டேன் என்றார்.
மாயாவதி மீது சிபிஐ போட்ட சில வழக்குகள் சமீபத்தில் தான் தள்ளுபடியாயின என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ அமைப்பை வைத்து மாயாவதியை மத்திய அரசு தனது வழிக்குக் கொண்டு வந்த நிலையில், இப்போது அவர் மீதான வழக்கு நெருக்கடிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தனது பேச்சின் மூலம் மாயாவதி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருவது தெளிவாகிறது. நாளை இவர் எடுக்கும் முடிவு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications