குஜராத்: 2-ம் கட்ட சட்டசபை தேர்தல்! பிரச்சாரம் ஓய்ந்தது!
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கான 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
குஜராத் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 87 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 70.75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் 2-ம் கட்டமாக 95 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 820 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இதில் 49 பேர் பெண்கள். மொத்தம் 1,98,99, 501 பேர் வாக்களார்கள். அனைத்து வாக்குகளும் டிசம்பர் 20-ந் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.
தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்போம் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பாஜகவின் மேனகா காந்தி, 40 ஆண்டுகாலமாக இந்தியாவில் வசித்து வரும் சோனியா காந்தி இன்னமும் ஹிந்தியை எழுதி வைத்துத்தான் படிக்கிறார். அவரால் சரளமாக ஹிந்தியில் பேச முடியவில்லை என்று விமர்சித்திருக்கிறார்.
இறுதி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் போட்டிப் போட்டு பிரச்சாரம் செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications