உடம்பு சரியில்லையாம்: காவல் நிலையத்தில் ஆஜராக 4 நாட்கள் டைம் கேட்கும் அக்பருத்தீன் ஒவைசி

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார். இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் காஷிம்ஷெட்டி கருணாசாகர் என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஒவைசி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி ஒவைசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்தபோது ஒவைசி லண்டனில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒவைசியின் குடல் பகுதியில் காயம் பட்டது. அதற்கு சிகிச்சை பெறத் தான் அவர் லண்டன் சென்றார். இந்நிலையில் அவர் இன்று காலை நாடு திரும்பினார். அவர் வருகையையொட்டி ஹைதராபாத் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டிருந்தனர். அவர் இன்று நிர்மல் நகர் காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று கூறப்பட்டது.
முன்னதாக ஒவைசி நிர்மல் நகர் காவல் நிலையத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்மல் நகர் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒவைசி நிர்மல் நகருக்கு வருகையில் அவரது வாகனத்திற்கு முன்பும், பின்பும் 30 முதல் 40 வாகனங்கள் பாதுகாப்புக்காக செல்லவிருக்கிறது என்று கூறப்பட்டது. மேலும் ஹைதராபாத், சைபராபாத், ரங்கா ரெட்டி, மேடக், நிஜாமாபாத் மற்றும் ஆதிலாபாத் எஸ்.பி.க்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் இத்தனை ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லாததால் இன்னும் 4 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications