பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள்
தஞ்சை: விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதாலும், கர்நாடகம் காவிரி நீரைத் போதுமான அளவு திறந்து விடாததாலும் டெல்டா மாவடங்களில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் வாடிக் கிடப்பதைப் பார்த்து வேதனை அடைந்த விவசாயிகளில் சிலர் கடனை அடைக்க முடியாமலும், வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்காக உழவர் திருநாளாம் பொங்கலை கொண்டாடப் போவதில்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் தங்கள் வயல்களில் கறுப்புக் கொடிகளை நட்டு வைத்து போராடி வருகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கருகியது போக மீதமுள்ள பயிர்களைக் காக்கவாவது மத்திய அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications