நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு.. அபாண்டம் என்கிறார் 'மதிமுக' மல்லை சத்யா
சென்னை: காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆக்கிரமித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும், காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் கருணகரனும் ஆக்கிமித்துள்ளதாக அகில பாரத வாகன ஓட்டுனர் சங்க தலைவர் சிவராஜன் தலைமையில் பலர் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலதக்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக 100 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சியில் பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வதற்கு தகுதியின் அடிப்படையில் பெட்ரோல் பங்க் அமைக்க கருணாகரனுக்கு 26.11.2011 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதற்காக விண்ணப்பித்த சில அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அது கிடைக்காத காரணத்தினால் பல்வேறு இடையூறுகளை தொடர்ந்து செய்து வந்தனர்.
பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு முறையான ஆவணங்கள் அனைத்தும் இருந்ததனால் கருணாகரனுக்கு ஒதுக்கப்பட்டது. 1969ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் சாலவாக்கம் ஊராட்சியில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு வீடு கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் நில எடுப்பிலிருந்து கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆதிதிராவிட மக்களுக்கு அதே சாலவாக்கம் ஊராட்சியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட நிலத்தை (எண்.36/1ஏ, 36/3ஏ) தான் கருணாகரன் கிரையம் பெற்றார். அவர் பெயரில் பட்டாவும் மாற்றலாகி உள்ளது. இந்த நிலத்தில்தான் பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன், பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது.
உண்மை இவ்வாறு இருக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மீதும், வைகோ புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சதி செய்து, அதற்கு அப்பாவி மக்களை போராட தூண்டியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் சத்யா.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications