பனிமூட்டம்… நேபாளத்தில் கிடுகிடு பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 30 பேர் பலி
காட்மண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலையில் மலைப்பகுதியில் சென்ற பேருந்து 600 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமய மலையின் மீது அமைந்துள்ள நாடு நேபாளம். இன்று அதிகாலை நேரத்தில் டோட்டி மாவட்டத்தின் சத்திவான் கிராம மலைப்பகுதிக்கு 35 பேருடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. நடுவில் சில பயணிகள் ஏறிக்கொண்டனர். பனிமூட்டம் அதிகமா இருந்த காரணத்தால் பள்ளத்தாக்கு இருந்த பகுதி சரிவர தெரியவில்லை. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, 600 மீட்டர் செங்குத்தான பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் தேடுதல் வேட்டையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் மலைப்பாதைகள் சரிவர பராமரிக்கப்படாமல் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. கடந்த 5 மாதங்களில் மட்டும் இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications