144 தடை விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதா- கமல் தரப்பு கேள்வி
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடை வழக்கில் இன்று கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன் அரசுக்கு எதிரான கடுமையான வாதத்தை வைத்தார். இதை அரசுத் தரப்பே எதிர்பார்க்கவில்லை.
வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது வாதத்தின்போது, விஸவரூபம் படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியிடப்படாவிட்டால் ரூ. 80 கோடி அளவுக்கு கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.
இப்படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் ஓடிக் கொண்டிருக்கிறது. பிறகு ஏன் தமிழகத்தில் மட்டும் வெளியிடக் கூடாது...
தமிழத்தில் ஒரு படத்தை எதிர்த்து மொத்தம் உள்ள 31 மாவட்டங்களிலும் 144 தடைச் சட்டத்தைப் பிரயோகித்துள்ளனர். அப்படியானால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும். அவ்வளவு மோசமாகவா உள்ளது சட்டம் ஒழுங்கு என்று கேட்டார்.












Click it and Unblock the Notifications