5 வெடக் கோழி, 500 ரூபாய்… கற்பழிப்பு குற்றவாளிக்கு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடிபோதையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 5 வெடக்கோழிகளும், 500 ரூபாயும் அபராதம் விதித்து கட்டப்பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் சக்ரதார்பூர் பகுதியில் குடிகாரன் ஒருவன் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக இளம் பெண் ஒருவர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தார். இது விசாரணைக்கு வந்தது. விசாரித்த நாட்டாமை, குற்றவாளிக்கு 5 வெடக் கோழிகளும், 500 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ஆட்டுக்கிடாய் அபராதம்
இதேபோல் தலைநகர் ரஞ்சியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தாரிடம், குடி போதையில் இருந்த ஒரு ஆசாமி தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவனை அழைத்து விசாரித்த பஞ்சாயத்தார், குற்றவாளிக்கு ஒரு ஆட்டுக்கிடாவை அபராதமாக விதித்து தீர்ப்பளித்தனர்.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதா? மரண தண்டனை அளிப்பதா? ஆண்மை நீக்கம் செய்வதா? என்று நாடு முழுவதும் பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்னமும், ஆட்டுக்கிடாய் அபராதம் போட்டு குற்றவாளியை தப்பவைத்துவிடுகின்றனர் என்பதுதான் வேதனையான விசயமாக உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications