ஐஐடி-களில் 43% பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை!

லோக்சபாவில் கடந்த 13-ந் தேதி ஐஐடி காலி பணியிடங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில் அத்ரிச்சிக்குரியதாக இருந்தன. 50%அளவுக்கு காலி பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பில் பி.ஹெச்.டி படிப்போர் எண்ணிக்கை குறைந்து போய் இருப்பதும் பெரும்பான்மையான பொறியியல் மாணவர்கள் கார்ப்பரேட் நிறுவனப் பணிகளையே அதிகம் விரும்பிச் செல்வதாலும் இந்த நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருந்த சில புள்ளி விவரங்கள்:
ஐஐடி வாரணசாமி, ரூர்கி உள்ளிட்ட 8 பழைய ஐஐடிகளில் 5,356 பேராசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் 3,158 பேராசிரியர்களே பணியாற்றுகின்றனர். எஞ்சிய 41% காலியிடமாகவே இருக்கிறது. இதில் ஐஐடி வாரணாசியில் மட்டும் 57% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
ஐஐடி டெல்லியில் 50%, ஐஐடி கராக்பூரில் 48%, ஐஐடி குவகாத்தியில் 42% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஐஐடி கான்பூரில் 19%, ஐஐடி ரூர்கியில் 38% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
புதிய ஐஐடிகளில் 410 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 57% இடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தமாக அனைத்து ஐஐடிகளிலும் 2,608 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 43% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
மேலும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) நிலைமையோ மிக மோசமாக இருக்கிறது. நாட்டின் 20 பழமையான தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில்5,891 பேராசிரியர் பணியிடங்களுக்குஅனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால்3,083 பேர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறது. 48% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வாரங்கல், பாட்னா, ஸ்ரீநகர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா,அகர்தலா, ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 50%க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதேபோல அனைத்து தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் 3,034 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 50% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
நடப்பு நிதி ஆண்டில் ஐஐடிகளுக்கு ரூ3,670 கோடியும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூ1,719 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications