ஐஐடி-களில் 43% பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை!

லோக்சபாவில் கடந்த 13-ந் தேதி ஐஐடி காலி பணியிடங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில் அத்ரிச்சிக்குரியதாக இருந்தன. 50%அளவுக்கு காலி பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பில் பி.ஹெச்.டி படிப்போர் எண்ணிக்கை குறைந்து போய் இருப்பதும் பெரும்பான்மையான பொறியியல் மாணவர்கள் கார்ப்பரேட் நிறுவனப் பணிகளையே அதிகம் விரும்பிச் செல்வதாலும் இந்த நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருந்த சில புள்ளி விவரங்கள்:
ஐஐடி வாரணசாமி, ரூர்கி உள்ளிட்ட 8 பழைய ஐஐடிகளில் 5,356 பேராசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் 3,158 பேராசிரியர்களே பணியாற்றுகின்றனர். எஞ்சிய 41% காலியிடமாகவே இருக்கிறது. இதில் ஐஐடி வாரணாசியில் மட்டும் 57% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
ஐஐடி டெல்லியில் 50%, ஐஐடி கராக்பூரில் 48%, ஐஐடி குவகாத்தியில் 42% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஐஐடி கான்பூரில் 19%, ஐஐடி ரூர்கியில் 38% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
புதிய ஐஐடிகளில் 410 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 57% இடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தமாக அனைத்து ஐஐடிகளிலும் 2,608 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 43% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
மேலும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) நிலைமையோ மிக மோசமாக இருக்கிறது. நாட்டின் 20 பழமையான தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில்5,891 பேராசிரியர் பணியிடங்களுக்குஅனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால்3,083 பேர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறது. 48% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வாரங்கல், பாட்னா, ஸ்ரீநகர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா,அகர்தலா, ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 50%க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதேபோல அனைத்து தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் 3,034 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 50% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
நடப்பு நிதி ஆண்டில் ஐஐடிகளுக்கு ரூ3,670 கோடியும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூ1,719 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications