சென்னையில் மேலும் 127 'அம்மா கேண்டீன்கள்' திறப்பு.. விரைவில் பிற மாநகராட்சிகளிலும்...
சென்னை: சென்னையைப் போல் மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று விலைவாசி உயர்வு பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் கூறியதாவது:
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கை தான் காரணம். தமிழக அரசும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சென்னை மாநகாரட்சியைப்போல் மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய, பண்ணை பசுமை நுகர்வோர் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான நிதி ரூபாய் 50 கோடியிலிருந்து ரூபாய் 100 கோடியாக்கப்படும்.
127 மலிவு விலை உணவகங்கள்:
ஏழை, எளியோர், நலன் காக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மூலம் 73 மலிவு விலை உணவகங்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்கள் மூலம் இட்லி ஒரு ரூபாய்க்கும் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 127 உணவகங்களை இன்று திறந்து வைத்துள்ளேன்.
ஆக மொத்தம், 200 மலிவு விலை உணவகங்கள் தற்போது சென்னையில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்தத் திட்டம் இதர மாநகராட்சிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார்.
முன்னதாக இன்று 127 மலிவு விலை உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications