இலங்கையை காமென்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும்: திருமாவளவன்
சென்னை: இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் நாடுகளின் அடுத்த மாநாடு இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் பிரிட்டிஷ் அரசியாரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையில் காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் குழுவான 'காமன்வெல்த் மினிஸ்டிரியல் ஆக்ஷன் குரூப் (சி.எம்.ஏ.ஜி)' வரும் ஏப்ரல் 26ம் தேதி லண்டனில் கூடவுள்ளது. ஒரு நாட்டை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடை நீக்கம் செய்வதற்கு இந்தக் குழுவுக்கு அதிகாரம்உள்ளது.
இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கனடா முதலான நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இக்குழுவுக்குத் தற்போது தலைமை ஏற்றிருக்கும் வங்கதேசம், இலங்கையை ஆதரிப்பதால் இக்கூட்டத்தில் இலங்கை பிரச்சனை விவாதிக்கப்பட மாட்டாது என தெரிய வந்துள்ளது. இது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, செய்ன்ட் கிட்ஸ், கேமரூன், மால்டா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சைப்ரஸ் ஆகிய எட்டு நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை வழிமொழிந்திருந்தன.
சியர்ரா லியோன், இந்தியா ஆகியவை ஆதரித்து வாக்களித்திருந்தன. இந்தப் பத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தால் இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றிவிட முடியும்.
அதற்கு ஏப்ரல் மாதம் லண்டனில் நடக்கவுள்ள வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலேயே தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை இந்தியா தவற விடக் கூடாது.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானமாகும். அத்தகைய தலைக்குனிவுக்கு இந்தியா ஆளாகக் கூடாது. எனவே லண்டனில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கையைப் பற்றி விவாதிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications