ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடரும்… வைகோ
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப் படுத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டம்பர் 28 இல் தந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் , ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன காரணங்களை ஏற்பதற்கு இல்லை என்றும், அதனால் அந்தத் தீர்ப்பை நிராகரிப்பதாகவும் கூறினார்.

அதே நேரத்தில் தூத்துக்குடியை அடுத்துள்ள கடலும், தீவுகளும் தேசிய கடல் பூங்கா என்று தமிழ்நாடு அரசு 1986 இல் அறிவித்ததை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு அறிவிக்குமானால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆலை குறித்து அகற்றுவது உள்ளிட்ட எந்த முடிவையும் மேற்கொள்ளலாம்' என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்காடியவர்கள், தொண்டு மனப்பாண்மையோடு, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பாராட்டுக்குறிய விதத்தில் செயல்பட்டு உள்ளார்கள் என்றும் நீதிபதி கூறினார்.
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
நாங்கள் தொடர்ந்து ஒரு யுத்தம் நடத்துகிறோம். ஒரு களத்தை இங்கே இழந்தாலும், யுத்தத்தைத் தொடருவோம். இதே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வேன். மராட்டிய மாநிலத்தில் இரத்னகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டி, கடப்பாறையோடு ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கியதால், மராட்டிய மாநில அரசு லைசென்சை இரத்து செய்தது. தென் தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் அப்படி தாக்குதல் நடத்தவில்லை. அறவழியில் நீதிக்காகப் போராடினோம்.
ஸ்டெர்லைட் மூலம் அரசாங்கத்துக்கு வருமானம் வருகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அடியோடு பாழாகிவிட்டது. எண்ணற்றவர்கள் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். அரசாங்க வருமானத்திற்காக தூத்துக்குடி வட்டார மக்கள் உயிர்களை பலியிடுவதா? .
ஆலையை மூட வேண்டும் என்று மார்ச் 30 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தந்த உத்தரவை, உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு கட்டுப்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார் வைகோ.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications