ஸ்பெக்ட்ரம் ஊழல்- நான் ஒன்றுமறியாதவன்.. பிரதமருடன் ஆலோசித்தே முடிவுகளை எடுத்தேன்: ராசா

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணை நடத்தபப்ட்டது. இதில் தாம் ஆஜராகி சாட்சியம் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று ஆ.ராசா கோரியிருந்தார். ஆனால் இதனை பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோ நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை ஆ.ராசாதான் தவறாக வழிநடத்தினார் என்று பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தாம் ஒன்றுமறியாதவன் என்பதை நிரூபிப்பேன். நான் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுமே பிரதமருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டவைதான். இதுதொடர்பான பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு பல நூறு பக்க ஆவணங்களை நான் அனுப்பி வைக்க இருக்கிறேன் என்றார் அவர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசாவை பார்லிமென்ட் கூட்டுக் குழு முன்பு சாட்சியம் அளிக்க அழைக்காமலேயே அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர்... இது அர்த்தமற்றது... அவர் மீது இப்பொழுது குற்றம்சுமத்துகிறவர்கள் அவரை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
அதன் பிறகு அவர்கள் அறிக்கைவெளியிட்டிருக்க வேண்டும். ஆ.ராசாவை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க விரும்பவில்லை என்கிற போது அதன் அறிக்கை எப்படி சரியானதாக இருக்க முடியும்?. அவர் பார்லிமென்ட் கூட்டுக் குழு முன்பு சாட்சியமளிக்காத நிலையில் அந்த அறிக்கையே ஒன்றுக்கும் பயனற்றது. தற்போதையது ஒரு வரைவு அறிக்கைதான். இறுதி அறிக்கையை திமுக உறுப்பினர்கள் கையெழுத்து இல்லாமல் எப்படி தாக்கல் செய்வார்கள் என்று பார்ப்போம் என்றார் அவர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications