தென் மாவட்டங்களில் கனமழை.. சூறாவளிக் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன
மதுரை: மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல ஆயிரம் மதிப்பிலான வாழைமரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று கன மழை பெய்தது. மழையோடு பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் சாலையோர மரங்கள் வேறொடு சாய்ந்து விழுந்தன. இதனால் வாகனப் போக்குவரத்து தடை பட்டது.
முத்துதேவன்பட்டியில் சூறாவளி காற்று காரணமாக பல இடங்களில் மரங்களோடு மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால், அப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டது. கூரை மற்றும் ஓட்டு வீடுகளின் மேற்கூரைகள் சூரைக்காற்றால் பெயர்த்து வீசப்பட்டன.

வாழைமரங்கள் சேதம்
இதேபோல் தேனி மாவட்டம் கோட்டூர், சீலையம்பட்டி, உள்ளிட்ட பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 200 மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தார் வந்த நிலையில் இருந்த வாழை மரங்களும், 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்தன. இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தங்களுக்கு நிவாரண உதவி அளிக்கவேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தோட்டகலைத்துறை அதிகாரிகள் சேத மதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழையினால் குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications