தமிழக வறட்சி: சென்னை வந்தது மத்திய நிபுணர் குழு!
சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய வேளாண்மை கூடுதல் செயலாளர் பிரவேஸ் சர்மா தலைமையில் 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்து உள்ளது.
மத்திய நிபுணர் குழுவினர் 9-ந் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு 4 குழுக்களாக பிரிந்து சென்று வறட்சி பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது நீர்நிலை, குடிநீர் ஆதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றியும் ஆய்வு நடத்துகிறார்கள்.
10 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய குடிநீர்வடிகால் அமைச்சக துணை ஆலோசகர் பாலசுப்பிரமணியன் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் மத்திய நிபுணர் குழு தமிழகத்தில் ஆய்வுப் பணிகள் குறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது, ‘தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள வறட்சியை நேரடியாக ஆய்வு செய்ய வந்து உள்ளோம். நாங்கள் சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளோம். அதன் பின்னர் தமிழகம் முழுவதும் குழுக்களாக பிரிந்து சென்று வறட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வோம்.
அதன்பிறகு மீண்டும் சென்னையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு டெல்லி சென்று மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம்' என இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications