மதிய உணவு சாப்பிட்டு இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா அருகே நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 80 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்துவிட, 20 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்தனர்.
உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாலேயே இந்த கொடிய மரணங்கள் நேர்ந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தைகளில் மேலும் 5 பேர் நேற்று இரவுக்குள் இறந்துவிட்டனர்.
இதனால் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கையில் மேலும் இரு குழந்தைகள் சேர்க்கப்படவில்லை என்று சம்பவம் நடந்த கிராமத்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த துயர சம்பவத்தின் நினைவாக, அனைத்துக் குழந்தைகளின் உடல்களையும் தர்மாசதி கண்மான் கிராமத்திலேயே புதைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, பலியான குழந்தைகள் படித்த பள்ளியின் முதல்வர் மீனா தேவி தலைமறைவாகிவிட்டார். அவரது கணவர் நடத்தும் மளிகைக் கடையிலிருந்துதான் மதிய உணவு சமைக்கத் தேவையான பொருட்கள் மற்றும் எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெயில் மருந்து வாடை அடிப்பதாக சமையல் பணியாளர் பள்ளி தன்னிடம் கூறியும் அதிலேயே சமைக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications