யார் பிரதமர்? மோடிக்கு 19%- ராகுலுக்கு 12%- கருத்துக் கணிப்பு
தற்போதைய நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இக்கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பிரதமராக யாரை ஆதரிப்பீர்கள் என்ற கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது.
நரேந்திர மோடி பிரதமராக 19%, ராகுல் காந்திக்கு 12%, சோனியாவுக்கு 5%, மன்மோகன்சிங்குக்கு 6%, மாயாவதிக்கு 3%, அத்வானிக்கு 2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எந்தக் கருத்தும் இல்லை என 39% தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் மோடிக்கு 37%, ராகுலுக்கு 29% ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் மோடிக்கு 17%, ராகுலுக்கு 37% ஆதரவு கிடைத்துள்ளது. மேற்கு இந்தியாவில் மோடி-43%, ராகுலுக்கு 33%, மத்திய இந்தியாவில் மோடிக்கு 41%, ராகுலுக்கு 29%, கிழக்கு இந்தியாவில் மோடிக்கு 34%, ராகுலுக்கு 30% ஆதாவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களில் 45% ராகுலையும் 18% மோடியையும் ஆதரிக்கின்றனராம்.
சரி காங்கிரஸில் யார் பிரதமராக வேண்டும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது?
காங்கிரஸைப் பொறுத்தவரையில் ராகுல் -48%, சோனியா 16%- மன்மோகன்சிங் -14%, ப.சிதம்பரம்-2% ஆதரவு உள்ளது.
பாரதிய ஜனதாவில், மோடி-66%, அத்வானி 12%, சுஷ்மா -5%, அருண் ஜேட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு தலா 1% ஆதரவு உள்ளது.