முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு உரிமை இல்லை என்பதா?: உச்சநீதிமன்றம் கேள்வி

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசோ, ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. பின்னர் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசுக்கு முல்லைப் பெரியாறு அணை மீது எப்படி உரிமை உள்ளது? என்று கேள்வி எழுப்ப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்க எப்படி சட்டம் இயற்றலாம்? என்று கேரள தரப்பு வழக்கறிஞரிடம் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கேரளா தரப்போ, முல்லைப் பெரியாறு அணை தங்களுக்கே சொந்தம், அதே நேரத்தில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவதில் எந்த பிரச்சனையுமே இல்லை என்று வாதிட்டார்.
பிற்பகலில் நடைபெற்ற விவாதத்தின் போது, 1886ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் - இந்திய அரசு இடையேயான ஒப்பந்தம் நாடு விடுதலை அடைந்த பிறகு இயல்பாகவே காலாவதியாகிவிடும். தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணை மீது எந்த உரிமையும் இல்லை என்று கேரள தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டும் கேரள அரசு ஏன் நிறைவேற்றவில்லை? நீதிமன்றத்தை உத்தரவை முடக்கும் வகையில் ஒரு சட்டம் நிறைவேற்றுவதா? என சராமரி கேள்வியை எழுப்பினர். மேலும் முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதி தமிழகத்தில் இருப்பதால் எப்படி தமிழகத்துக்கு உரிமை இல்லை என கூற முடியும்? கேரளாவுக்கு மட்டுமே அணை சொந்தம் என்பதை நிரூபிக்க வேண்டும்? கேரளா இயற்றும் சட்டங்கள் பிற மாநிலங்களை பாதிக்கக் கூடாது என்று காட்டம் காட்டினர்.
பின்னர் நாளையும் வாதம் தொடரும் என்று நீதிபதிகள் இன்றைய விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications