நிறுத்தாம பாடறீயே... கோபத்தில் சுற்றுலாப்பயணியைக் குத்திக் கொன்ற பாடகர்கள்
பாங்காக்: தொடர்ந்து பாடிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஆத்திரத்தில் பாடகர்கள் குத்திக் கொன்ற சம்பவத்தால், தாய்லாந்திற்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தின் கிராபி என்ற இடத்தில் உள்ளது ஆவோ நங் கடற்கரைப் பகுதி. இங்குள்ள லாங் ஹார்ன் சலூனின் கேளிக்கை விடுதியில்நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களோடு சுற்றுலாப் பயணிகளும் இணைந்து பாடினர்.
இசையுடன் இணைந்து கொள்ளலாம், நல்ல இசை, நல்ல ஊழியர்களுடன் கேளிக்கை என்பதே அந்த விடுதியின் இணையதள விளம்பரம் ஆகும். சம்பவத்தன்று, அங்கு சுற்றுலா வந்திருந்த பாபி ரே கார்ட்டர் என்ற 51 வயது அமெரிக்கர், தனது 27 வயது மகன் ஆடமுடன் மேடையில் பாடிக் கொண்டிருந்த பாடகர்களுடன் சேர்ந்து பாடினார்.
ஒருகட்டத்தில் பாடகர்கள் ஓய்வெடுக்க விரும்பியும், பாபி விடாமல் பாடிக் கொண்டிருந்தாராம், இதனால் ஆத்திரமடைந்த பாடகர்கள் அவரது கழுத்தில் சரமாரியாக குத்தினர். இதில் பாபி பரிதாபமாகப் பலியானார். கொலையைத் தடுக்க முற்பட்ட ஆடமுக்கும் கையில் கத்திக்குத்து விழுந்தது.
குற்றவாளிகளைக் கைது செய்த போலீசார், கொலையின் பிண்ணனியில் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications