இலங்கை இறுதிப் போர்.. இந்தியக் கொடி பறந்த கப்பலில் இருந்தும் குண்டு வீச்சு: வவுனியா கோர்ட்டில் மனு!!
வவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் முல்லைத் தீவு கடற்பரப்பில் இந்திய தேசியக் கொடியுடன் நின்ற கப்பலில் இருந்தும் பொதுமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இறுதிப் போரில் அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் பற்றி வவுனியா மேல்நீதிமன்றத்தில் ஏற்கெனவே 5 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நேற்று வவுனியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது கூடுதலாக 7 மேலும் 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய மனு ஒன்றில், பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சுதந்திரபுரத்தில் நான் தங்கியிருந்தேன். அப் பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதே நேரத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்தும் கரையில் மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி குண்டுகள் வீசப்பட்டன.
இறுதிப் போரில் இரசாயனக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 5 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீது பதிலளிக்க இலங்கை அரசுக்கு நேற்று கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.
நேற்று நீதிமன்ற விசாரணையின் போது அடுத்த இரண்டு நாட்களில் பதில் மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் அடுத்த மாதம் 12ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications