இலங்கை இறுதிப் போர்.. இந்தியக் கொடி பறந்த கப்பலில் இருந்தும் குண்டு வீச்சு: வவுனியா கோர்ட்டில் மனு!!
வவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் முல்லைத் தீவு கடற்பரப்பில் இந்திய தேசியக் கொடியுடன் நின்ற கப்பலில் இருந்தும் பொதுமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இறுதிப் போரில் அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் பற்றி வவுனியா மேல்நீதிமன்றத்தில் ஏற்கெனவே 5 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நேற்று வவுனியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது கூடுதலாக 7 மேலும் 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய மனு ஒன்றில், பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சுதந்திரபுரத்தில் நான் தங்கியிருந்தேன். அப் பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதே நேரத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்தும் கரையில் மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி குண்டுகள் வீசப்பட்டன.
இறுதிப் போரில் இரசாயனக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 5 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீது பதிலளிக்க இலங்கை அரசுக்கு நேற்று கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.
நேற்று நீதிமன்ற விசாரணையின் போது அடுத்த இரண்டு நாட்களில் பதில் மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் அடுத்த மாதம் 12ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications