பல்லவனில் ஏறினால் இனி திருச்சியையும் தாண்டி காரைக்குடி வரை போகலாம்
சென்னை: சென்னையிலிருந்து திருச்சி வரை சென்று கொண்டிருக்கும் பல்லவன் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இனி காரைக்குடி வரை செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய மாற்றம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

சென்னை எழும்பூரிலிருந்து
செப்டம்பர் 1-ந்தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து தினசரி பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்(12605) காரைக்குடி வரை செல்லும்.

காரைக்குடியிலிருந்து
அதைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ந்தேதி முதல் காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் (12606) தினசரி அதிகாலை 4.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும்.

திருச்சிக்கு இரவு 9.29 மணிக்கு
சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்(12605) தினமும் இரவு 9.20 மணிக்கு திருச்சியை சென்றடையும். பின்னர் அங்கிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.12 மணிக்கு புதுக்கோட்டைக்கும், இரவு 11.25 மணிக்கு காரைக்குடிக்கும் சென்றடையும்.

அதிகாலை 4.30 க்கு காரைக்குடியிலிருந்து
மறுபாதையில் இயங்கும் காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 5.05 மணிக்கு புதுக்கோட்டையையும், காலை 6.15 மணிக்கு திருச்சியையும் சென்றடையும்.

திருச்சியிலிருந்து காலை 6.30 மணிக்கு
பின்னர் திருச்சியில் இருந்து காலை 6.30 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications