சொத்து குவிப்பு வழக்கு- அரசு வழக்கறிஞரை திரும்பப் பெற தடை கோரி ஜெ. மனு- சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
டெல்லி: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடகா அரசு திடீரென திரும்பப் பெற்றதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் இந்த வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கவும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
1991-96ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரில் பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தாண்டி இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திடீரென திமுக இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது. இதற்கு பெங்களூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பின்னர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி திமுக மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீது பதிலளிக்க கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார்.
இம் மனு நீதிபதிகள் டி.எஸ்.சவுகான், எஸ்.ஜெ.பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் யு.யு.லலித் ஆஜராகி வாதாடினார். அப்போது, நீதிபதி பாலகிருஷ்ணா வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அரசு வழக்கறிஞரை மாற்றியிருப்பது சரியல்ல. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்றும் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது. பவானிசிங் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநிலத் தலைமை நீதிபதியுடன், அரசு ஏதேனும் ஒருவகையில் ஆலோசனை நடத்தியிருக்கக் கூடும். அது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், இது எப்படி தீர்ப்பை பாதிக்கும். சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓய்வு பெறுவது குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பார்த்துக்கொள்வார். அதுபற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்படதேவையில்லை என்றனர்.
அத்துடன் சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க இடைக்கால தடை உத்தரவையும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் திமுக பொதுச்செயலர் பேராசிரியர் க.அன்பழகனையும் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications