ஹெலிகாப்டரில் பறந்த ஆடு மேய்ப்பவர்கள்.. கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. என்ன காரணம் தெரியுமா?
சித்ரதுர்கா : கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் பறந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் எனும் ஹெலிகாப்டர் பயண சுற்றுலா அமைக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா மாவட்டத்தில் புதிதாக ஹெலி டூரிசம் தொடங்கப்பட்ட நிலையில், விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஹெலி டூரிசம்
கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், 200 விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் இலவசமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

இலவசமாக பறக்க அனுமதி
சித்ரதுர்கா மாவட்டத்தில் ஹெலி டூரிசம் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில், அதனை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் முதல் 2 நாட்கள் இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்து சுற்று வட்டார பகுதிகளை கண்டு களித்தனர்.

200 விவசாயிகள்
கடந்த 2 நாட்களாக காலை 8 மணி முதல் மாலை 2.30 மணி வரை ஹெலிகாப்டர் ரைடு நடத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பறந்து சென்றனர். இதைதொடர்ந்து இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டு ஹெலிகாப்டர் ரைடு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு சவாரி
ஹெலி டூரிசத்தை ஊக்குவிக்க ஹெலிகாப்டர் ரைடு நடத்தப்பட்டதுபோல் வாணி விலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒசதுர்கா தொகுதி எம்.எல்.ஏ கூலிஹட்டி டி.சேகர் செய்திருந்தார்.
-
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications