Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் கல்லூரிகள் இன்று திறப்பு - உடுப்பி, மைசூருவில் 144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சினையால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. உடுப்பி, மைசூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடகா மாநிலத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. மைசூரு, உடுப்பி மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிஜாப் அணிவதற்கு போட்டியாக இந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வரவே போராட்டங்கள் வெடித்தன. உடுப்பி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. ஒரு கல்வி நிறுவனத்தில் தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது.

Hijab issue: Karnataka Colleges reopen today - 144 ban orders in Udupi and Mysore

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. இந்த விவகாரம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதிக்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாக்குவாதம் மூண்டது. ஹிஜாப்பை அகற்றிய பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் மாநிலம் முழுவதிலும் உள்ள பியுசி, பட்டய கல்லூரிகள், பாலிடெக்னிக், நர்சிங்உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுப்பி, ஷிமோகா, மைசூரு ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள‌து. கல்லூரி நிறுவனங்களைச் சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதேபோல கல்வி நிலையங்களுக்கு அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்வுகள் நெருங்கி வருவதால் கல்லூரிகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+