மக்கள் பிரச்சினையில் சமரசம் கிடையாது மேகதாது அணை கட்டுவது உறுதி.. கர்நாடக முதல்வர் பொம்மை பிடிவாதம்
பெங்களுரு: மக்கள் தொடர்பான பிரச்சினையில் எந்த சமரசமும் கிடையாது என்றும் காவிரியில் மேகதாது அணை கண்டிப்பாக கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை பிடிவாதமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மேகதாது அணை பிரச்சினை மீண்டும் விஸ்வரூபமெடுக்க மூல காரணம் கர்நாடக முதல்வர் எடியூரப்பாதான்.
''பெங்களுரு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம்'' என்று எடியூரப்பா சர்ச்சை பேட்டி அளித்து பிரச்சினையை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் கொந்தளிப்பு
ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது. இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பாக வழக்கு உள்ளதால், கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் காவிரி நீரையே நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஓரணியில் திரண்ட கட்சிகள்
''மேகதாது அணை கட்டக்கூடாது. இது நல்லுறவுக்கு உகந்த சூழ்நிலை அல்ல'' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு அதிரடி பதில் கொடுத்தார். காவிரி மேலாண்மை வாரியத்திலும் தமிழ்நாடு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்க்கட்சி என அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்தன.

கர்நாடகாவுக்கு எதிராக தீர்மானம்
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்து மேகதாது அணை கட்ட முடிவெடுத்து இருக்கும் கர்நாடகா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்த தீர்மான நகலை கட்சிகளின் பிரதிநிதிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்தனர். மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதினார்.
Recommended Video

பசுவராஜ் பொம்மை பிடிவாதம்
கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்த பிறகு புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டார். புதிய முதல்வர் பசுவராஜ் பொம்மையும் மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தடாலடியாக அறிவித்தார் பொம்மை. இந்த நிலையில் இன்று கர்நாடக மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றிய பொம்மை '' மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை கட்டப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

பெங்களூரு குடிநீர்
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் அரசு அதிகாரிகளிடம் பிரச்சினையின் அனைத்து பரிமாணங்களையும் விளக்கியுள்ளோம். அதற்கான உரிய அனுமதியைப் பெற்ற பிறகு மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம். மேகதாது அணை கட்டும்பட்சத்தில் இங்கு இருந்து கிடைக்கும் 4.75 டி.எம்.சி தண்ணீரை பெங்களூரு மற்றும் அண்டை பகுதிகளில் குடிநீராகப் பயன்படுத்த வேண்டும்.

சமரசம் கிடையாது
பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதையே இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தவிர 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனாலும் தமிழகம் இந்த திட்டத்தை எதிர்க்கிறது. தங்கள் மாநிலத்தின் நலன்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், பாசன வசதி பெறும் விவசாயிகளின் தண்ணீரைப் பறிப்பதாகவும் தமிழகம் கூறுகிறது. கர்நாடகாவின் எல்லை, மொழி, நிலம், நீர் மற்றும் அதன் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் வரும்போது நான் எந்தவித சமரசம் செய்யமாட்டேன். இவ்வாறு பசுவராஜ் பொம்மை தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications