ஜூன் 21 வரை கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு.. பெங்களூருக்கு கூடுதல் தளர்வு..2 மணிவரை கடை திறக்கலாம்
பெங்களூர்: ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் கர்நாடக அரசு சில தளர்வுகள் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெங்களூர் நகரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை, காய்கறி , மளிகை, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டும் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக, மட்டும் கார் அல்லது ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பெங்களூர் ஊரடங்கு
ஆரம்பத்தில், இருசக்கர வாகனங்கள் , கார் போன்றவற்றை பயன்படுத்தி காய்கறி வாங்குவதற்கு செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் மக்களிடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக, பிறகு அதில் மட்டும் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணிக்குள் கடைகளுக்கு செல்வோர் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு வாகனங்களை பயன்படுத்த கூடாது என்பது காவல்துறை உத்தரவு.

ஊரடங்கு நீட்டிப்பு
இந்த நிலையில்தான், பெங்களூரில், தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வந்துகொண்டிருக்கிறது. ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில் 21ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள கர்நாடக அரசு, பெங்களூர் நகரம் உள்ளிட்ட நோய் பரவல் குறைந்து வரும், 20 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.

மதியம் 2 மணிவரை கடைகள்
இதன்படி மதியம் 2 மணி வரை, பழங்கள், காய்கறிகள், உணவு பொருள் விற்பனை கடைகள், இறைச்சி, மீன் , பால், செல்ல பிராணிகளுக்கான கால்நடை தீவனங்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தெருவோர வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுபானக் கடைகள்
தனியாக அமைந்துள்ள மதுபான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கிக் கொள்ளலாம். உள்ளே உட்கார்ந்து மது அருந்துவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு டெலிவரி செய்யும் சேவைகள் 24 மணி நேரமும் செயல்படும் இதன்மூலம் வெளியே கூட்டம் கூடுவது குறையும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான தொழில்
கட்டுமான தொழில் சார்ந்த பணிகள் மற்றும் நிறுவனங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே இயங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை பூங்காக்கள் திறந்து வைக்கப்படும், நடைப்பயிற்சி, ஜாகிங் செய்வோர் உரிய ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

டாக்சி இயங்கலாம்
டாக்சி மற்றும் ஆட்டோக்கள் அதிகபட்சமாக இரண்டு பயணிகளுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள், பொதுப்பணித்துறை , வீட்டுவசதி, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், கூட்டுறவு, நபார்டு, வருவாய் துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கி கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மூக்கு கண்ணாடி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது.

மைசூர், சாம்ராஜ்நகருக்கு தளர்வு இல்லை
அதே நேரம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். அதேபோன்று , வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூர் கிராமப்புற மாவட்டம் அதாவது பெங்களூரின் புறநகர் மாவட்டம் , ஹாசன், தென் கன்னடா, மண்டியா, மைசூர், பெல்காம், குடகு, சிக்கமங்களூர், ஷிமோகா, தாவணகெரே, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் தளர்வு கிடையாது. அங்கு இப்போது உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும். ஏனென்றால் அங்கு நோய் பரவல் தாக்கம் இன்னமும் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications