பெங்களூரின் நம்பர் ஒன் பணக்காரர் யார் தெரியுமா? யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. வெளியான ஆய்வறிக்கை
பெங்களூர்: பெங்களூர் நகரில் வசிப்போரில் பெரும் பணக்காரராக முதலிடத்தில் யார் இருக்கிறார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இந்த நபர் இன்போசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி கிடையாது. வேறு யார்? பார்க்கலாம் வாங்க
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் உள்ள பெரும் பணக்காரர்கள் யார்? ஆசியாவில் பெரும் கோடீஸ்வரர் யார்? இந்தியாவில் அதிக சொத்து வைத்திருக்கும் தொழிலதிபர்கள் யார்? என்று தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு நிறுவனம் தான் Hurun.

இந்த நிறுவனம் என்பது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் எத்தனை கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களில் யார் முதலிடத்தில் உள்ளனர்? என்பது பற்றிய தகவலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் Hurun India Rich List 2024 என்ற பெயரில் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூர் நகரில் எத்தனை பெரும் பணக்காரர்கள் உள்ளனர்? அதில் முதலிடத்தில் இருப்பது யார்? என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெங்களூரை பொறுத்தவரை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, பயோகான் தலைவர் மற்றும் கிரண் மஜூம்தார் உள்ளிட்டவர்கள் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். ஆனால் இந்த லிஸ்ட்டில் தற்போது பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
ஃபிரிட்ஜ்ஜில் 50 துண்டாக கிடந்த பெண்.. உடல் உறுப்பை இணைத்து.. மிரண்ட பெங்களூர் டாக்டர்கள்.. என்னாச்சு
அதாவது பெங்களூர் நகரில் வசிக்கும் பெரும் பணக்காரர்களின் லிஸ்ட்டில் விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி உருவாகி உள்ளார். இவருக்கு மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 700 கோடி சொத்து உள்ளது. இவர் மொத்த இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார்.
மேலும் இந்த அறிக்கையின்படி இந்தியாவில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் 3வது இடத்தில் பெங்களூர் உள்ளது. பெங்களூரில் 27 பேர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளது. அங்கு மொத்தம் 92 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். 2வது இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு 68 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தான் பெங்களூர் உள்ளது.
சித்தராமையா தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. 'மூடா' முறைகேடு வழக்கு..சற்று நேரத்தில் ஹைகோர்ட் தீர்ப்பு
இதுதவிர இந்தியாவை பொறுத்தமட்டில் பெரும் பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 11.6 லட்சம் கோடியாகும். 2வது இடத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார். இவருக்கு ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்பு உள்ளது. 3வது இடத்தில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.14 லட்சம் கோடியாக உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications