ராஜீவ் காந்திக்கு நடந்தது தெரியுமா? டிகே சிவக்குமார் கிட்ட வந்த நபர்.. கையை பிடித்து வளைத்து- வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் பொது இடத்தில் கோபமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

Recommended Video

    ராஜீவ் காந்திக்கு நடந்தது தெரியுமா? டிகே சிவக்குமார் கிட்ட வந்த நபர்.. கையை பிடித்து வளைத்து- வீடியோ

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் 58 வயது நிரம்பியவர். கட்சியின் வலுவான தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் இவர் அடிக்கடி கோபம் அடையும் குணம் கொண்டவர்.

    பொது இடங்களில் பல முறை கோபம் அடைந்து, அது வீடியோவாக வெளியாகி சர்ச்சையில் இவர் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில்தான் அவரின் இன்னொரு வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.

    டிகே சிவக்குமார்

    டிகே சிவக்குமார்

    மாண்டியாவில் நடந்த கூட்டம் ஒன்றில் சிவக்குமார் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவருக்கு பின் பக்கம் தொண்டர்கள் பலர் கூட்டமாக வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திடீரென எங்கிருந்தோ வந்த வெள்ளை சட்டை, ஜீன்ஸ் அணிந்த நபர், டிகே சிவக்குமாரை மோதுவது போல கூட்டத்திற்குள் நுழைந்தார்.

    செல்போன் செல்பி

    செல்போன் செல்பி

    அவர் உள்ளே வந்ததும் டிகே சிவகுமாரை நோக்கி கையை நீட்டியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில்தான் அவர் செல்போனை வைத்து செல்பி எடுக்க முயன்றது தெரியவந்தது. இதை பார்த்ததும் கோபம் அடைந்த டிகே சிவக்குமார்.. அந்த நபரின் கையை பிடித்து வளைத்து.. அப்படியே அந்த போனை பிடுங்கி.. கோபமாக சிவக்குமார் கத்தினார்.

     ராஜீவ் காந்தி சிவக்குமார்

    ராஜீவ் காந்தி சிவக்குமார்

    ராஜீவ் காந்திக்கு நடந்தது நினைவு இருக்கா என்று கோபமாக அந்த இளைஞரிடம் சிவக்குமார் கேட்டார். இதையடுத்து தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், அவரின் கையில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் நினைவு இருக்கலாம். நான் செய்ததில் எந்த தவறும் இல்லை.

    டிகே சிவக்குமார் விளக்கம்

    டிகே சிவக்குமார் விளக்கம்

    கோபம், உணர்ச்சிகள் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். இதெல்லாம் மனித உணர்வு. இதில் தவறு இல்லை என்று தான் செய்த காரியத்திற்கு டிகே சிவக்குமார் விளக்கம் அளித்தார். இருப்பினும் இளைஞர் ஒருவரின் போனை வெடுக்கென டிகே சிவக்குமார் பிடுங்கியது தவறு என்று பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    இந்த வீடியோவை ஷேர் செய்து பலரும் டிகே சிவக்குமாரை விமர்சனம் செய்து வருகின்றன. இது தவறு என்று கூறி பலர் விமர்சனம் செய்து வருகின்றன. ஏற்கனவே பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் டிகே சிவக்குமார் இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+