பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவியேற்கிறார் நவ்ஜோத் சிங் சித்து.. ராஜினாமாவை திரும்ப பெற்றார்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே இங்கு உட்கட்சி பூசல் நடந்து வருகிறது. பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையில் கடும் பனிப்போர் நிலவியது
இடையில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. நவ்ஜோத் சிங் சித்துவும், அமரீந்தர் சிங்கும் டெல்லி சென்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட்டனர்.

பஞ்சாப் உட்கட்சி பூசல்
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏதும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்று சோனியா காந்தி அவர்களை சமாதானம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து அமரீந்தர் சிங்குக்கு எதிராக அனைவரும் திரண்டனர். முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் மீது எம்.எல்.ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா
இதனை தொடர்ந்து அமரீந்தர்சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து காங்கிரசில் இருந்தும் விலகிய அமரீந்தர்சிங், புதிய கட்சியையும் ஆரம்பித்தார்.
அமரீந்தர்சிங் விலகியதால் பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதாரவாளர் ஆவார். இதற்கிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்து இருந்தார்.

ராஜினாமாவை திரும்பப் பெற்றார்
அவர் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து அவர் டெல்லி சென்று ராகுல் காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். அவர் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றார் நவ்ஜோத் சிங் சித்து.

திரும்பப் பெற்றுள்ளேன்
இது தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து. கூறுகையில், 'நான் எனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளேன். புதிய அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்பட்டதும் கட்சி அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்பேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications