Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் முதல்வரானால்.." ரிசல்ட் வெளியாகும் முன்பே ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் கொடுத்த "வாக்குறுதி"

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: முதலமைச்சரானால் அதை தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டேன் என ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் என ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை காலை வெளியாக உள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்புகள்

கருத்துக்கணிப்புகள்

கடந்த 7ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் 7ம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவரத்துவங்கின. இதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. மணிப்பூரில் பாஜக பெரும்பான்மை பெறும் என்றும், கோவா மற்றும் உத்தரகாண்டில் தொங்கு சட்டசபை அமையும் என தெரியவந்துள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப்

இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கே மீட்டெடுப்பேன் என்று ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு குறித்து பகவந்த் மான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''என்னைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் என்றால் காமன்மேன் என்று அர்த்தம். நான் முதலமைச்சரானாலும் அது என் தலைக்கு ஏறாது. உயர் பதவி கிடைத்தாலும் அதில் நீடிப்பேன்.

மக்கள்

மக்கள்

புகழ் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும். நான் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். அது எனக்கு ஒன்றும் புதிதல்ல. மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள். பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுப்பேன். நாங்கள் பஞ்சாபை மீண்டும் பஞ்சாப்பாக ஆக்குவோம். அதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அது பிற கட்சிகளின் கனவு. அவர்கள் தோற்றுப் போகிறார்கள'' என்றார்.

 பகவந்த் மான்

பகவந்த் மான்

சங்ரூர் மக்களைவை உறுப்பினராக இருக்கும் பகவந்த் மான், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுல் ஒருவர். தற்போது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பஞ்சாப் மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+