"நான் முதல்வரானால்.." ரிசல்ட் வெளியாகும் முன்பே ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் கொடுத்த "வாக்குறுதி"
சண்டிகர்: முதலமைச்சரானால் அதை தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டேன் என ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் என ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை காலை வெளியாக உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்புகள்
கடந்த 7ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் 7ம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவரத்துவங்கின. இதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. மணிப்பூரில் பாஜக பெரும்பான்மை பெறும் என்றும், கோவா மற்றும் உத்தரகாண்டில் தொங்கு சட்டசபை அமையும் என தெரியவந்துள்ளது.

பஞ்சாப்
இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கே மீட்டெடுப்பேன் என்று ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு குறித்து பகவந்த் மான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''என்னைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் என்றால் காமன்மேன் என்று அர்த்தம். நான் முதலமைச்சரானாலும் அது என் தலைக்கு ஏறாது. உயர் பதவி கிடைத்தாலும் அதில் நீடிப்பேன்.

மக்கள்
புகழ் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும். நான் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். அது எனக்கு ஒன்றும் புதிதல்ல. மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள். பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுப்பேன். நாங்கள் பஞ்சாபை மீண்டும் பஞ்சாப்பாக ஆக்குவோம். அதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அது பிற கட்சிகளின் கனவு. அவர்கள் தோற்றுப் போகிறார்கள'' என்றார்.

பகவந்த் மான்
சங்ரூர் மக்களைவை உறுப்பினராக இருக்கும் பகவந்த் மான், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுல் ஒருவர். தற்போது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பஞ்சாப் மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications