1.5 லட்சம் விநாயகரை தடையை மீறி வைப்போம் - இந்து முன்னணி காடேஸ்வரா சுப்ரமணியம்
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகளை கடந்த ஆண்டு எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அங்கு எல்லாம் வைத்து வழிபடுவோம் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார
சென்னை: அரசு அனுமதி வழங்காவிட்டாலும், ஏற்கனவே ஏற்பாடு செய்தபடி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்றும் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவோம் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அரசின் தடையை மீறி விழா கொண்டாடுவோம் என்று கூறியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.
Recommended Video
கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் மகிழ்ச்சிக்காகத்தானே தவிர சோகமயமானதாக மாறிவிடக்கூடாது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், ஆனித்தேரோட்டம், ஆடிப்பெருந்திருவிழாக்களை மாநிலம் முழுவதும் நடைபெறவில்லை. லாக்டவுன் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் தங்களின் வீடுகளிலேயே பாதுகாப்பாக பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா பல்லாயிரக்கணக்கானோர் கூடும் பண்டிகை. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்துடன், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கண்டித்த நீதிமன்றம்
ஒரு நாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று, இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், மனுதாரர் மனுவை திரும்பப்பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என்றும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

தமிழக அரசு கவனித்துக்கொள்ளும்
இந்த நிலையில் அரசின் தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மற்றும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் என விளக்கமளித்ததுடன், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

காடேஸ்வரா சுப்ரமணியம்
இந்த நிலையில் தடையை மீறி விழா நடத்துவோம் என்று கூறியுள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியம். வருகிற 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகளை கடந்த ஆண்டு எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அங்கு எல்லாம் வைத்து வழிபடுவோம் என்றும் கூறியுள்ளார்.

டாஸ்மாக்கில் வராதா?
விநாயகர் சதுர்த்தி, ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு நாங்கள் வைத்த கோரிக்கைக்கு இப்போது வரை எந்த பதிலும் வரவில்லை. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்கள் கூட்டமாக கூடுகிறார்கள். அங்கு வராத கொரோனா விநாயகர் சதுர்த்தி விழாவில் வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இறைச்சிக்கடைகளில் கூட்டம்
இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள். இதனை அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சிலைகளை வைக்கிறோம் என்று கூறினாலும் இந்த அரசாங்கம் எங்களை புறக்கணிக்கிறது என்றும் கூறியுள்ளார். தடையை மீறி சிலைகள் வைப்போம் என்று கூறியுள்ளார் பதற்றம் எழுந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications