சென்னை பல்கலை.யில்.. பட்டப்படிப்பில் சேராமலேயே பட்டம் பெற முயற்சி.. சிக்கிய 117 பேர்..என்ன நடந்தது?
சென்னை: பொதுவாக தேர்வு எழுதும்போது சிலர் முறைகேட்டில் சிக்கி மாட்டிக் கொள்வது. தேர்வு கூடத்தில் பிட் வைத்து எழுதுவது, நண்பர்களிடத்தில் வினாத்தாள்களை பரிமாறிக் கொள்வது என பல்வேறு முறைகேடான விஷயங்கள் நடக்கும்.
ஆனால் படிக்காமலேயே பட்டம் பெற முயற்சித்த சிலர் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். இது வேறு மாநிலத்திலும் இல்லை. நம்ம தமிழ்நாட்டில்தான் இந்த அவலம் நடந்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்
பாரம்பரியமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. அதாவது சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980 -ம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020-ம் ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.

வசமாக சிக்கிய 117 பேர்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி117 பேர் எந்த பட்டப்படிப்பிலும் படிக்காமலேயே இந்த ஆன்லைன் தேர்வு எழுதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் இந்த மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளது என்பதுதான் இதில் அதிர வைக்கும் விஷயமாகும். தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் ஒவ்வொருவரிடம்மும் தலா ரூ.3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு இந்த மோசடிக்கு உதவியுள்ளது.

தேர்வு முடிவுகள் ரத்து
இந்த மோசடிகளை சென்னைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து 117 பேரையும் கையும், களவுமாக பிடித்துள்ளது. இதனையடுத்து எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு?
மேலும், இந்த மோசடி குறித்து விசாரிக்க விசாரணை குழுவை அமைத்து சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி உத்தரவிட்டுள்ளார். வேறு யாரேனும் இதுபோன்ற மோசடி செயலில் ஈடுபட்டுள்ளர்களா? என்று கண்டுபிடிக்க அந்த குழு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த மெகா மோசடியில் முக்கிய புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தவிர சென்னைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களுக்கும் மோசடியில் தொடர்பு இருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர். விசாரணை குழுவின் விசாரணை போக போகத்தான் இதில் தொடர்புடைய அனைவரும் வெளிச்சத்துக்கு வருவார்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications