1,171 ஆசிரியர்களின் பணிக்கு “ஆபத்து”.. பள்ளிக்கல்வித்துறை திட்டம்! தேர்வில் பாஸ் ஆகாததால் சிக்கல்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத 1,747 அரசுப் பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய, மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் இந்த டெட் எனப்படும் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே ஆசிரியராக முடிவு.
கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

டெட் தேர்வு
தமிழ்நாடு அரசு TNTET எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தால் இடைநிலை ஆசிரியராக பணிபுரியலாம். 2 வது தாளில் தேர்ச்சிபெற்றால் பட்டதாரி ஆசிரியராக முடியும். இதனால் புதிதாக பணியில் சேர்பவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே ஆசிரியராக இருப்பவர்களும் தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கால அவகாசம்
பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் அரசால் வழங்கப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டும் டெட் தேர்வெழுத அவசியம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பணி நீக்கமா?
அதே நேரம் மற்ற ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற பல முறை அரசு காலக்கெடுவை நீடித்து வந்தது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் 1,717 ஆசிரியர்கள் டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி அடையாமலேயே இருக்கும். இந்த நிலையில் இந்த 1,717 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்து இருக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் காகர்லா உஷா, "அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 1,717 பேர் இன்னும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து பணியில் நீடித்து வைத்திருக்க இயலாது. அந்த ஆசிரியர்களை நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பணியிலிருந்து நீக்கம் செய்வது பற்றி ஆலோசிக்கப்படும்." என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications