1,171 ஆசிரியர்களின் பணிக்கு “ஆபத்து”.. பள்ளிக்கல்வித்துறை திட்டம்! தேர்வில் பாஸ் ஆகாததால் சிக்கல்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத 1,747 அரசுப் பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய, மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் இந்த டெட் எனப்படும் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே ஆசிரியராக முடிவு.
கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

டெட் தேர்வு
தமிழ்நாடு அரசு TNTET எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தால் இடைநிலை ஆசிரியராக பணிபுரியலாம். 2 வது தாளில் தேர்ச்சிபெற்றால் பட்டதாரி ஆசிரியராக முடியும். இதனால் புதிதாக பணியில் சேர்பவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே ஆசிரியராக இருப்பவர்களும் தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கால அவகாசம்
பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் அரசால் வழங்கப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டும் டெட் தேர்வெழுத அவசியம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பணி நீக்கமா?
அதே நேரம் மற்ற ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற பல முறை அரசு காலக்கெடுவை நீடித்து வந்தது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் 1,717 ஆசிரியர்கள் டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி அடையாமலேயே இருக்கும். இந்த நிலையில் இந்த 1,717 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்து இருக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் காகர்லா உஷா, "அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 1,717 பேர் இன்னும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து பணியில் நீடித்து வைத்திருக்க இயலாது. அந்த ஆசிரியர்களை நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பணியிலிருந்து நீக்கம் செய்வது பற்றி ஆலோசிக்கப்படும்." என்றார்.
-
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!












Click it and Unblock the Notifications