மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் பயிலரங்கம்! 2 நாட்களாக பாடம் எடுத்த முக்கியப் பிரமுகர்கள்!
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற 2 நாள் அரசியல் பயிலரங்கத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலர் கட்சி நிர்வாகிகளுக்கு பாடம் எடுத்தனர்.
பீட்டர் அல்போன்ஸ், ஜெகத் கஸ்பார், திரு முருகன் காந்தி, தனியரசு, என முக்கியப் பிரமுகர்கள் பலர் தமிமுன் அன்சாரியின் அழைப்பை ஏற்று அந்த பயிலரங்கத்தில் பேசினர்.
கட்சியை அடுத்தக் கட்டத்தை நோக்கி கொண்டு செல்லும் முனைப்பில் உள்ள தமிமுன் அன்சாரி, இப்போது சுற்றுப்பயணங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்.

பீட்டர் அல்போன்ஸ்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில அளவிலான இரு நாள் அரசியல் பயிலரங்கு சென்னை - கோவளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், ஃபாஸிச சக்திகளை எதிர்கொள்ளும் ஜனநாயக முறைகள், வலைதள பதிவுகளில் கவனம், உள்ளிட்டவைகள் பற்றி பேசினார்.

மதிய உணவு
பீட்டர் அல்போன்ஸை தொடர்ந்து பேசிய கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, அரசியலில் சமூக நீதியாளர்களின் பங்களிப்பு என்ன?, மதவாத சக்திகளை ஜனநாயக வழியில் முறியடிப்பது எப்படி? ஆகிய விவகாரங்கள் பற்றி பேசினார். அதைத் தொடர்ந்து மஜக நிர்வாகிகளுக்கு வாழை இலை போடப்பட்டு பிரியாணி உணவு பரிமாறப்பட்டது. நிர்வாகிகளோடு சேர்ந்து தமிமுன் அன்சாரியும் தரையில் அமர்ந்தவாறே மதிய உணவு சாப்பிட்டார்.

திரு முருகன் காந்தி
இரண்டாம் நாள் அரசியல் பயிலரங்கில் பேசிய திருமுருகன் காந்தி, தமிழர் ஒற்றுமை, ஈழ விவகாரத்தில் தமிழர், தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் ஏற்படுத்த வேண்டிய இணக்கப்பாடுகள், கொள்கை அரசியலை முன்னெடுத்தல் குறித்து வகுப்பெடுத்தார். அவரைத் தொடர்ந்து பேசிய ஜெகத் கஸ்பார், கல்வி மேம்பாட்டின் அவசியம குறித்து அக்கறை பொங்க விளக்கினார். அதே போல் நம்மை சுற்றி நிகழும் விவகாரங்களை எவ்வாறு புரிந்துக் கொள்வது? பலவீனங்களை பலமாக மாற்றுவது எப்படி? என்ற கருத்தியலில் வகுப்பெடுத்தார்.

விளையாட்டுப் போட்டி
மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டு நாள் அரசியல் பயிலரங்கு வகுப்புகள், கலந்துரையாடல், கேள்வி - பதில், குழு விவாதம், குறும் படங்கள் ஒளிபரப்பு, விளையாட்டு நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி என பன்முக சூழலோடு நிர்வாகிகள் மனம் மகிழும் வகையில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications