மும்பையிலிருந்து சென்னைக்கு பறந்து வந்த 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்.. ஆனால், அத்தனையும் தனியாருக்கு!
சென்னை: தமிழகத்திற்கு 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு சென்றன.
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
தளா்வுகளற்ற முழு ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழக அரசு தீவிரம்
அதோடு தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியுள்ளது.மேலும் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள்,மாற்றுதிரனாளிகளுக்கு அவா்கள் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசிகள் போடுதல் போன்றவைகளிலும் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது.

தேவையான தடுப்பூசி இல்லை
இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்காமல் குறைவாகவே வழங்குகிறது.

தனியார் கொள்முதல்
இதையடுத்து தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் தனியாா் மருத்துவ நிறுவனங்கள் தனியாரிடமிருந்து தடுப்பூசி கொள்முதல்களை செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனவே, மருந்து நிறுவனங்கள் தனியாருக்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது. தமிழக அரசுக்கு கடந்த சில நாட்களாக தடுப்பூசிகள் வரவில்லை.

விமானத்தில் வருகை
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்காக வந்திருந்தன. 18 பாா்சல்களில் 588 கிலோ தடுப்பூசி மருந்து பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கியதும், விமானநிலைய அதிகாரிகள் அந்த தடுப்பூசி மருந்து பாா்சல்களை தனியாா் மருத்துவமனை எஜென்சிகளிடம் ஒப்படைத்தனா்.












Click it and Unblock the Notifications