ராகுல் டிராவிட்டால் இந்திய அணி வேற லெவலுக்கு போகும்.. 3 காரணங்கள் இருக்கு.. கம்பீர் பளிச்!
சென்னை: ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது அணியின் வெற்றிக்கு உதவும் என்றும் அதற்கான மூன்று காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்திற்கு வந்துள்ளார் ராகுல் டிராவிட்.
இந்த நிலையில்தான் அவரது பயிற்சியின் கீழ் நேற்று நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

கவுதம் கம்பீர்
முன்னதாக ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கௌதம் கம்பீர் பேசுகையில் சில கருத்துக்களை தெரிவித்தார். ராகுல் டிராவிட் ஒரு மிகச்சிறந்த வீரராக செயல்பட்டவர் , அதேபோன்று சிறப்பான பயிற்சியாளராகவும் அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

3 காரணங்கள்
அவர் கேப்டனாக பணியாற்றிய போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். டிரெஸ்சிங் அறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும் . நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் விளையாடியிருக்கிறார், கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் அவர் தனது பணியில் காட்டும் அர்ப்பணிப்பு நம்பமுடியாத அளவுக்கு இருக்கும், மிகவும் கடின உழைப்பாளி அவர். எனவே அவர் இந்தியாவை சிறந்த அணியாக மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

ராகுல் டிராவிட் பதில்
முன்னதாக ராகுல் டிராவிட்டிடம் செய்தியாளர் சந்திப்பின்போது பயிற்சியாளர் விஷயத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்வீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, சில பயிற்சி கொள்கைகள் அதே மாதிரி தான் இருக்கும், ஆனால் ஒவ்வொரு அணிக்கு எதிராக ஆடும்போதும் சில மாற்றங்கள் செய்யப்படும், இந்திய கிரிக்கெட் அணியை புரிந்துகொள்வதற்கு எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும், என்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் அதன்பிறகு வீரர்களிடம் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது எப்படி என்று பார்க்க வேண்டும். இதுதான் எனது தத்துவம் என்று கூறினார் ராகுல் டிராவிட்.

சிறந்த பயிற்சி
ராகுல் டிராவிட் ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்த அணிகளில் விளையாடியவர்கள் மிகச் சிறந்த வீரர்களாக உருவெடுத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், சீனியர்களை கொண்ட இந்திய அணியை இவர் நினைத்தபடியெல்லாம் மாற்ற முடியுமா, தேவையில்லாமல் ராகுல் டிராவிட் மீது அதிக அழுத்தத்தை பிறர் வைக்கிறார்களா என்பதெல்லாம் வரும் காலங்களில் தெரிய வரும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications