ராகுல் டிராவிட்டால் இந்திய அணி வேற லெவலுக்கு போகும்.. 3 காரணங்கள் இருக்கு.. கம்பீர் பளிச்!
சென்னை: ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது அணியின் வெற்றிக்கு உதவும் என்றும் அதற்கான மூன்று காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்திற்கு வந்துள்ளார் ராகுல் டிராவிட்.
இந்த நிலையில்தான் அவரது பயிற்சியின் கீழ் நேற்று நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

கவுதம் கம்பீர்
முன்னதாக ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கௌதம் கம்பீர் பேசுகையில் சில கருத்துக்களை தெரிவித்தார். ராகுல் டிராவிட் ஒரு மிகச்சிறந்த வீரராக செயல்பட்டவர் , அதேபோன்று சிறப்பான பயிற்சியாளராகவும் அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

3 காரணங்கள்
அவர் கேப்டனாக பணியாற்றிய போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். டிரெஸ்சிங் அறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும் . நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் விளையாடியிருக்கிறார், கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் அவர் தனது பணியில் காட்டும் அர்ப்பணிப்பு நம்பமுடியாத அளவுக்கு இருக்கும், மிகவும் கடின உழைப்பாளி அவர். எனவே அவர் இந்தியாவை சிறந்த அணியாக மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

ராகுல் டிராவிட் பதில்
முன்னதாக ராகுல் டிராவிட்டிடம் செய்தியாளர் சந்திப்பின்போது பயிற்சியாளர் விஷயத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்வீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, சில பயிற்சி கொள்கைகள் அதே மாதிரி தான் இருக்கும், ஆனால் ஒவ்வொரு அணிக்கு எதிராக ஆடும்போதும் சில மாற்றங்கள் செய்யப்படும், இந்திய கிரிக்கெட் அணியை புரிந்துகொள்வதற்கு எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும், என்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் அதன்பிறகு வீரர்களிடம் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது எப்படி என்று பார்க்க வேண்டும். இதுதான் எனது தத்துவம் என்று கூறினார் ராகுல் டிராவிட்.

சிறந்த பயிற்சி
ராகுல் டிராவிட் ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்த அணிகளில் விளையாடியவர்கள் மிகச் சிறந்த வீரர்களாக உருவெடுத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், சீனியர்களை கொண்ட இந்திய அணியை இவர் நினைத்தபடியெல்லாம் மாற்ற முடியுமா, தேவையில்லாமல் ராகுல் டிராவிட் மீது அதிக அழுத்தத்தை பிறர் வைக்கிறார்களா என்பதெல்லாம் வரும் காலங்களில் தெரிய வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications