சென்னையில் யுகேஜி மாணவனை அடித்த ஆசிரியர்கள் 3 பேர் கைது

தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை ஒழுங்காக எழுதவில்லை என்ற யுகேஜி மாணவனை அடித்த 3 ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏபிசிடி என்ற ஆங்கிலல எழுத்துக்களையும் தமிழில் அ,ஆ என உயிரெழுத்துக்களையும் ஒழுங்காக எழுதாத யுகேஜி மாணவனை அடித்து காயப்படுத்திய 3 ஆசிரியர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரவள்ளூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் யூகேஜி படிக்கும் அந்த மாணவனுக்கு கடந்த 9 ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அப்போது யுகேஜி மாணவன் ABCD மற்றும் தமிழ் எழுத்துகளை ஒழுங்காக எழுதவில்லை என்பதற்காக 3 ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், பள்ளியில் இருந்த சிறுவனை அவரது பெற்றோர் அழைத்துச் செல்லுமாறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு அழைத்து செல்லும் போது சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிறுவன் தன்னை அடித்த அடித்த ஆசிரியர்களை நினைத்து புலம்பத் தொடங்கினார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. பலமுறை நடையாக நடந்து காவல்துறையினர் கைது செய்ய மறுப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தமிழ் ஆசிரியர் பிரின்சி, வகுப்பு ஆசிரியர் இன்டியனா வான், ஆங்கில ஆசிரியர் மோனோ பெராரா ஆகியோரை திருவிக நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர்கள் 3 பேரும் விசாரணைக்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னை மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்த, பள்ளிக் கல்வித் துறை மெட்ரிகுலேஷன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+