தமிழ்நாட்டில் இன்று 3039 பேருக்கு கொரோனா.. 69 பேர் பலி.. 3411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3039 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுக்க குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 45 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. கேரளா, மகாராஷ்டிராவில் மட்டும் இன்னும் தினசரி கேஸ்கள் பெரிய அளவில் குறையவில்லை.
கேரளாவில் தினமும் சராசரியாக 13 ஆயிரம் என்ற அளவிலும், மகாராஷ்டிராவில் 9500 என்ற அளவிலும் கேஸ்கள் பதிவாகி வருகிறது. மாறாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக 3500க்கும் கீழ் கேஸ்கள் பதிவாகி வருகிறது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று 3039 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 69 பேர் பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை 33,322 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இன்று 3411 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 24,46,552 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 33,224 ஆக உள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 180 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 1646 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 349 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 4121 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 230 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 3242 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

டெஸ்ட்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 25,13,098 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,51,631 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,50,494 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 3,33,93,845 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications