சூப்பர்.. சலூன் கடைகளுக்கும் சலுகை.. கிராமத்து ஆண்களின் வயிற்றில் பால் வார்த்த முதல்வர் எடப்பாடியார்
விதிகளுடன் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் சலூன் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது..மாஸ்க், கையுறை அணிந்து முடி திருத்தம் செய்யவேண்டும் என்றும், கடையை தினசரி 5 முறை கிருமி நாசினி போட்டு சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் சலூன் கடைகளை திறக்க தடை தொடரும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் லட்சக்கணக்கான முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளனர்.. ஆனால் தொற்று காரணமாக முடி திருத்தும் தொழில் செய்ய தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனால் கடந்த 3 மாதங்களாகவே ஆண்களால் முடிவெட்ட முடியவில்லை.. தாடி, மீசை ட்ரிம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். ஒருசிலருக்கு வீடுகளிலேயே கட்டிங், சேவிங் செய்ய உதவி செய்யப்பட்டாலும், பலருக்கு தலைமுடி, தாடி வளர்ந்து புதர்போல காணப்பட்டது.

கடை வாடகை
அதேசமயம், முடி திருத்தும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டனர்.. இவர்களுக்கு அரசும் எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. இதனால் குடும்பத்தை சமாளிப்பதை மட்டுமல்லாமல், கடை வாடகையை கூட இவர்களால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர்.

சலூன் கடை
நேற்று முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஏகப்பட்ட தளர்வுகளும், விலக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி தராமலேயே இருந்தது. தற்போது, ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது... இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு செய்திக்குறிப்பும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:

தளர்வுகள்
"கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நோய்த் தொற்று குறைய குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

உத்தரவு
அதன் தொடர்ச்சியாக, தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

கிருமிநாசினி
இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முககவசங்கள் அணிவதை உறுதிசெய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications