போயும் போயும் கூவம்தான் கிடைச்சதா.. பட்டப் பகலில் பரபரத்த நேப்பியர் பாலம்.. வெளியான வீடியோ
சென்னை: நேப்பியர் பாலத்திற்கு அடியில் கூவம் ஆற்றில் இன்று மதியம் நடந்த சம்பவம் பற்றிதான் இப்போது தீயணைப்பு துறை முழுக்க பேச்சாக இருக்கிறது.
Recommended Video
அப்படி என்ன நடந்தது என்கிறீர்களா.. சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதிக்குள் ஒருவர் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் குதித்துள்ளார். தற்கொலை செய்ய முயன்ற அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
சேறும், சகதியுமாக அவர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பரபரப்பான நேப்பியர் பாலம்
சென்னை கடற்கரை சாலையிலுள்ள நேப்பியர் பாலம்.. வழக்கம்போல இன்றும் சற்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. பலரும் நடந்தபடி அந்த பகுதியை கடந்த மாதிரிதான், மதியம் 12 மணியளவில் ஒரு நபரும், அந்த பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆனால், அதற்கு பிறகுதான் விபரீதம் நடந்தது.

கூவத்தில் குதித்தார்
என்ன நினைத்தாரோ, பாலத்தின் அருகே போய் நின்றவர், திடீரென கூவத்தில் குதித்து விட்டார். மேலிருந்து கீழே குதித்த நபர் கூவம் ஆற்றின் சேறு, சகதியில் சிக்கி கத்த ஆரம்பித்தார். இதை அங்கே நடந்து போன மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பதறிய மக்கள்
உடனடியாக, பயந்து போய், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா சதுக்கம் காவல்துறையினர், மீட்புப் பணிக்காக திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினரை உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

உடம்பெல்லாம் சேறு
சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நபரை காவல்துறையினர் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர். உடம்பெல்லாம் சேறும், சகதியுமாக அந்த நபர் கயிற்றை பிடித்தபடியே மேலே தூக்கி விடப்பட்டார். இந்த வீடியோதான் தற்போது வெளியாகியுள்ளது.

விசாரணை
இதன்பிறகு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணையில் நேப்பியர் பாலத்தில் இருந்து கீழே குதித்த நபர் ராயபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (37) என்பது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரு நாற்றம்பிடித்த சகதிக்குள் போய் தற்கொலை செய்ய முயன்றுள்ளாரே இந்த மனிதன் என்று பார்ப்போரையெல்லாம் உச்சு கொட்ட வைத்துள்ளது இந்த சம்பவம்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications