போயும் போயும் கூவம்தான் கிடைச்சதா.. பட்டப் பகலில் பரபரத்த நேப்பியர் பாலம்.. வெளியான வீடியோ
சென்னை: நேப்பியர் பாலத்திற்கு அடியில் கூவம் ஆற்றில் இன்று மதியம் நடந்த சம்பவம் பற்றிதான் இப்போது தீயணைப்பு துறை முழுக்க பேச்சாக இருக்கிறது.
Recommended Video
அப்படி என்ன நடந்தது என்கிறீர்களா.. சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதிக்குள் ஒருவர் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் குதித்துள்ளார். தற்கொலை செய்ய முயன்ற அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
சேறும், சகதியுமாக அவர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பரபரப்பான நேப்பியர் பாலம்
சென்னை கடற்கரை சாலையிலுள்ள நேப்பியர் பாலம்.. வழக்கம்போல இன்றும் சற்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. பலரும் நடந்தபடி அந்த பகுதியை கடந்த மாதிரிதான், மதியம் 12 மணியளவில் ஒரு நபரும், அந்த பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆனால், அதற்கு பிறகுதான் விபரீதம் நடந்தது.

கூவத்தில் குதித்தார்
என்ன நினைத்தாரோ, பாலத்தின் அருகே போய் நின்றவர், திடீரென கூவத்தில் குதித்து விட்டார். மேலிருந்து கீழே குதித்த நபர் கூவம் ஆற்றின் சேறு, சகதியில் சிக்கி கத்த ஆரம்பித்தார். இதை அங்கே நடந்து போன மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பதறிய மக்கள்
உடனடியாக, பயந்து போய், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா சதுக்கம் காவல்துறையினர், மீட்புப் பணிக்காக திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினரை உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

உடம்பெல்லாம் சேறு
சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நபரை காவல்துறையினர் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர். உடம்பெல்லாம் சேறும், சகதியுமாக அந்த நபர் கயிற்றை பிடித்தபடியே மேலே தூக்கி விடப்பட்டார். இந்த வீடியோதான் தற்போது வெளியாகியுள்ளது.

விசாரணை
இதன்பிறகு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணையில் நேப்பியர் பாலத்தில் இருந்து கீழே குதித்த நபர் ராயபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (37) என்பது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரு நாற்றம்பிடித்த சகதிக்குள் போய் தற்கொலை செய்ய முயன்றுள்ளாரே இந்த மனிதன் என்று பார்ப்போரையெல்லாம் உச்சு கொட்ட வைத்துள்ளது இந்த சம்பவம்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications