Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்கு ஆவின் நெய் தட்டுப்பாடு..நிர்வாக திறமையின்மை..திமுக அரசை சாடும் டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சரியானதல்ல என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஆவின் பால் கொள்முதல் குறைந்து வருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய் , பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆவின் நெய் அதிக அளவில் தேவைப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் சிறு, சிறு பாலகங்கள் வைத்து நடத்தும் பால் முகவர்களுக்கு போதிய அளவு ஆவின் நெய் வழங்கப்படவில்லை. ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடுமையாக குறைந்து போனதன் காரணமாக நெய்க்கும் மூலப்பொருளான வெண்ணைக்கும் கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டு நெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Aavin Ghee shortage for Pongal Administrative incompetence says TTV Dhinakaran tweet

ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடுமையாக குறைந்து போனதன் காரணமாக வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதனால் நெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் பால் மட்டுமின்றி பால் சார்ந்த வெண்ணெய், நெய், பால்கோவா உள்ளிட்ட பல்வேறு வகையான பால் சார்ந்த உபபொருட்கள் உற்பத்தி செய்து பால் முகவர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆவின் நெய் அதிகளவில் தேவைப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் சிறு, சிறு பாலகங்கள் வைத்து நடத்தும் பால் முகவர்களுக்கு போதிய அளவு ஆவின் நெய் வழங்கப்படவில்லை. காரணம் நெய் உற்பத்திக்கு தேவையான வெண்ணெய் கையிருப்பு இல்லாமல் போனதும், உற்பத்தி செய்யப்படும் சொற்ப அளவிலான நெய்யும் ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களுக்கும், இணையதள செயலி மூலம் வணிகம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மொத்த விநியோகஸ்தர்களுக்கும் வாரிக் கொடுத்து அதிகாரிகள் ஆதாயம் பார்த்த காரணத்தால் தான்.

Aavin Ghee shortage for Pongal Administrative incompetence says TTV Dhinakaran tweet

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் வரை இருந்த பால் கொள்முதலானது பால்வள ஆணையரின் கீழ் செயல்படும் பால்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தாலும், பால் கொள்முதலுக்கான தொகை குறித்த காலத்தில் பட்டுவாடா செய்யப்படாததாலும், பால்வள ஆணையரின் தீவிர கண்காணிப்பு இல்லாததாலும் தற்போதைய திமுக ஆட்சியில் அது, 30 லட்சம் லிட்டராக குறைந்து போனது.

ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடுமையாக குறைந்து போனதன் காரணமாக நெய்க்கு மூலப்பொருளான வெண்ணெய்க்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதனால் நெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆவினில் தற்போது நிலவும் வெண்ணெய் தட்டுப்பாட்டை சரி செய்ய ஆவின் நிர்வாகம் தங்களது தேவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்வதால், அந்த வெண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நெய்க்கான அடக்கவிலை அதிகமாக ஆகிறது. அத்துடன் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்து, வெண்ணெய் எடுத்து நெய்யாக உருக்கும் போது ஒரு கிலோ வெண்ணைக்கு 850 கிராம் நெய் கிடைப்பதாகவும், இதுவே அண்டை மாநில பால் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்த வெண்ணையில் இருந்து 750 கிராம் நெய் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆவினில் தற்போது நெய் உற்பத்திக்கு அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை என்றும், அதனால் தான் மதுரை, கோவை, வேலூர், திருச்சி, திருவண்ணாமலை, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் நெய்க்கு கடுமையான தட்டுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

Aavin Ghee shortage for Pongal Administrative incompetence says TTV Dhinakaran tweet

அது ஒருபுறம் இருக்க மற்றொரு புறமோ சிறு, சிறு ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களிடம் நெய், பால்கோவா, பாதாம் பவுடர் உள்ளிட்டவைகள் அதிகமாக விற்பனையாகும் பால் உப பொருட்களை கொடுக்காமல், விற்பனை ஆகாத, கேக், முறுக்கு, மிச்சர், இனிப்பு, நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை வலுகட்டாயமாக கொள்முதல் செய்ய வற்புறுத்துவதோடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆவின் பால் பொருட்கள் வாங்கும் பாலகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் பால் முகவர்களை மிரட்டுகின்றனர்.

இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமானால் தமிழ்நாடு அரசு ஆவின் மீது அக்கறை கொண்டு, கடந்த ஆட்சியை விட அதிகமாக பால் கொள்முதல் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்துவது நிர்வாக இயக்குநரின் கடமையோ, அதுபோல பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது பால்வள ஆணையரின் கடமையாகும். ஒருவேளை ஆவின் நிர்வாக இயக்குநராகவும், பால்வள ஆணையராகவும் ஒருவரே பொறுப்பினை கவனிக்க முடியாத சூழலில், ஏற்கனவே பிரகாஷ் ஐஏஎஸ் அவர்களை பால்வள ஆணையராக தனி அதிகாரியாக நியமனம் செய்தது போன்று, வேறு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை பால்வள ஆணையராக நியமிக்க அரசு முன் வர வேண்டும்.

ஆவினில் நாளொன்றுக்கு சுமார் 29 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை ஆகும் சூழலில், குறைந்தபட்சம் நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்தால் மட்டுமே, கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் உற்பத்திக்கும், நெய் உற்பத்திக்கும் தேவையான வெண்ணெய் கையிருப்பு இருக்கும்.

மேலும் வரும் வாரத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள், ஐயப்பன் மகரஜோதி பூஜை, முருகன் தைப்பூசத் திருவிழா என அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதாலும், தனியார் பால் நிறுவனங்களின் நெய்யை விட, ஆவின் நெய் மனம், சுவை, தரம் சிறப்பாக இருக்கும் என்பதால் பக்தர்களும், பொதுமக்களும் ஆவின் நெய்யை அதிகமாக விரும்பி வாங்குவார்கள் என்பதாலும் நெய் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

Aavin Ghee shortage for Pongal Administrative incompetence says TTV Dhinakaran tweet

எனவே "நெய்க்கு தேவை வெண்ணெய், வெண்ணெய்க்கு தேவை பால்" எனும் நிலையில் இதன் ஆரம்பகட்ட சங்கிலித் தொடரான பால் கொள்முதலை அதிகப்படுத்த தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் நிறுவனத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும், அத்துடன் ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்தோர் 200க்கும் மேற்பட்டோரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து சாட்டையை சுழற்றியது போல் பால் உற்பத்தியை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் பால்வளத்துறை அதிகாரிகள் மீதும் தமிழக முதல்வர் அவர்கள் சாட்டையை சுழற்ற வேண்டும், அப்போது தான் ஆவினில் பால் கொள்முதல் அதிகரித்து பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தியும், விற்பனையும் பாதிக்கப்படாது என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சரியானதல்ல.

ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க ஆவின் நிர்வாகமும், அரசும் என்ன செய்யப்போகிறது?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+