பஞ்ச் பேசிய பன்னீர்செல்வம்.. ஆறு கடலில் கலக்கும்..கடல் ஆற்றில் கலக்காது.. ஐ.பெரியசாமிக்கு பதிலடி..!
சென்னை : அதிமுக விரைவில் திமுகவுடன் சங்கமமாகி விடும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக கடல் போன்றது என்றும், திமுக ஆறு போன்றது எனவும், ஆற்றில் ஒரு போதும் கடலில் கலக்காது என பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 80 சதவீதம், திமுகவிற்கு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதிமுகவில் தலைமை இல்லாததே இதற்குக் காரணம் என குறிப்பிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
தொடர்ந்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சரும் திமுக துணைப் பொதுசெயலாளருமான ஐ.பெரியசாமி, பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து விட்டதாகத் தெரிவித்ததோடு, காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமம் ஆகிவிடும் என்று தெரிவித்தார். அமைச்சர் ஐ.பெரியசாமியின் இந்த பேச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக ஒருபோதும் திமுகவில் இணைந்து விடாது எனவும் அவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதிமுக கண்டனம்
அதிமுக விரைவில் திமுகவுடன் சங்கமமாகி விடும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக கடல் போன்றது என்றும், திமுக ஆறு போன்றது எனவும், ஆற்றில் ஒரு போதும் கடலில் கலக்காது என பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியை பெற்றுவிட்டு, அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் அதிமுக இருக்காது என்றும், அது திமுக-வில் சங்கமமாகிவிடும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

அதிமுக கடல், திமுக ஆறு
திமுக என்பது ஒரு குடும்பக் கட்சி. ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால், அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். கடலினைப் போன்றது. ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்பதை கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோதும், அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியை அமைத்தபோதும், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், 'தம்பி வா, தலைமை ஏற்க வா' என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவருமான நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன் உட்பட திமுகவின் முன்னணித் தலைவர்கள், கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிமுக ஐக்கியமானதையும், திமுக கூடாரமே காலியானதையும், அதற்குப் பிறகு 13 ஆண்டுகள் திமுக வனவாசம் இருந்ததையும், கூட்டுறவுத் துறை அமைச்சர் மறந்துவிட்டார் போலும்!

மன மயக்கம்
அடுத்தபடியாக, சிறிய மாநகராட்சிகளையாவது அதிமுக கைப்பற்றி இருக்க வேண்டாமா என்ற ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே மாநகராட்சிக்கான தேர்தல் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது திமுக ஆட்சிக் காலத்தில்தான். சென்னை உயர் நீதிமன்றத்திடமிருந்தே 'நற்' சான்றிதழ் பெற்ற கட்சி திமுக தேர்தல் நடைபெற்ற விதம் அதிமுக-வினருக்கு நன்கு தெரியும் என்பதால் இதில் கட்சியினருக்கு எவ்விதமான ஆதங்கமும் இல்லை. "பொது வாழ்வில் உள்ள வெளிச்சம் மயக்கமூட்டும் ஒளி. இதனால் மகிழவே கூடாது என்பதல்ல. அது முடியாத காரியம். இதனால் மயக்கமடைந்து விடக்கூடாது. அந்த மயக்கம் வராமலிருக்கத்தான் புகழுரைக் கேட்கும்போது, தூற்றுபவரும் உள்ளனர் என்பதை மறவாமலிருக்க வேண்டும். புகழ்பவர்களே பிறகு இகழ்வார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மன மயக்கம் ஏற்படாது." என்றார் அண்ணா.

திமுகவில் சங்கமமாகாது
தற்போது மயக்கத்தில் இருக்கிறார் அமைச்சர். அண்ணாவின் பொன்மொழியைப் படித்துவிட்டு மயக்கத்திலிருந்து அவர் விடுபட வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் குறிப்பிட்டதுபோல், அதிமுகதான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்பதையும், அதிமுக ஒருநாளும் திமுகவில் சங்கமமாகாது என்பதையும் அமைச்சர் தெரிவித்துக் கொள்கிறேன்." என ஓபிஎஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு












Click it and Unblock the Notifications