”உண்மைய சொன்னேன்” பஞ்ச் வைத்து பேசிய ஓபிஎஸ்.. “சின்னம்மா” மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என பளிச்!
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திடம் உண்மையான தகவல்களை கூறியதாகவும், சின்னம்மா மீது தனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் உண்டு என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சுமார் 9 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என நேற்று ஓபிஎஸ் விளக்கம் அளித்த நிலையில் இன்று சசிகலா குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஓ .பன்னீர்செல்வம் பேட்டி
இன்று மாலை விசாரணை முடிவடைந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஏன் ஆஜராகவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஏழு முறை சம்மன் அனுப்பியதில் தனக்கு ஆறு முறை கடிதம் வந்ததாகவும், இரண்டு முறை சொந்த காரணத்தாலும் ஒருமுறை பட்ஜெட் என்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும் , எட்டு முறை சம்மன் என்பது தவறான கருத்து என்றார்.

விசாரணை குறித்து விளக்கம்
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவியை அகற்றுவதற்கு முன்புதான் அவரை பார்க்க அனுமதித்தார்கள் எனவும், அதற்கு முன்பு இருந்த 74 நாட்களும் தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதில், எந்த முரண்பாடும் இல்லை என தெரிவித்தார். மேலும் தனக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறவில்லை எனவும் மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகத்தான் தெரிவித்ததாக கூறிய ஓபிஎஸ் ,அந்த சந்தேகத்தை போக்குவதற்கும் சின்னம்மா மீது சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது, அப்படி சந்தேகத்தை போக்கினால் தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற வகையில் பேசியதாக குறிப்பிட்டார்.

சின்னம்மா என பேச்சு
மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முழு திருப்தியாக இருந்தது என்றும் ஆணையத்தில் உண்மையான தகவல்களை தான் கூறியதாகவும் தனிப்பட்ட முறையில் சின்னம்மா அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என்று தெரிவித்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications