நீட் தேர்வு தாக்கம்.. நாளை அறிக்கை சமர்ப்பிக்கும் ஏ கே ராஜன் குழு.. தமிழ்நாடு அரசின் முடிவு என்ன?
சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் தலைமையிலான குழு நாளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
இப்போது அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகவே அனைத்துக் கட்சிகளுக்கும் நிலைப்பாடு எடுத்துள்ளன.

ஏகே ராஜன் குழு
இந்நிலையில், நீட் தேர்வால் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்டு குழு கடந்த ஜூன் 10ஆம் தேதி அமைக்கப்பட்டது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு
தமிழ்நாடு அரசு நீட் தேர்வு குறித்து ஆராய அமைத்த இந்தக் குழுவை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

நாளை அறிக்கை
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏகே ராஜன் தலைமையிலான குழு நாளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 86 ஆயிரம் பேர் ஏகே ராஜன் குழுவிற்கு தங்கள் கருத்துகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு
முன்னதாக இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றும் இந்த ஆண்டு நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று தெரிவித்திருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications