Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதா?.. இது நியாயமல்ல.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி பகுதி நேர நிருபர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- சென்னை வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சி செய்திப்பிரிவுக்கு 6 மாவட்டங்களில் 8 பல் ஊடக செய்தியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அச்சம் நியாயமானது

அச்சம் நியாயமானது

இதை அடிப்படையாக வைத்து பல்வேறு ஐயங்களும், அச்சங்களும் எழுந்துள்ளன!சென்னை வானொலி, தொலைக்காட்சிக்கு 38 மாவட்டங்களிலும் பகுதி நேர செய்தியாளர்கள் உள்ளனர். பல் ஊடக செய்தியாளர்கள் நியமனத்தால் தாங்கள் படிப்படியாக பணி நீக்கப்படுவோம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களின் அச்சம் நியாயமானது ஆகும்! குதிநேர செய்தியாளர்கள் என்ற பெயரில் அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தி மொழியறிவு கட்டாயம் என அறிவிப்பு

இந்தி மொழியறிவு கட்டாயம் என அறிவிப்பு

வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்தப் பணியில் கழித்து விட்ட அவர்களை பணி நிலைப்பு செய்வதற்கு பதிலாக பணி நீக்கம் செய்ய நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல! பல் ஊடக செய்தியாளர்கள் சென்னை செய்திப்பிரிவுக்கு தான் செய்திகளைத் தர வேண்டும். அதற்கு இந்தி தேவையில்லை. ஆனால், இந்தி மொழியறிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாதா?

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாதா?

இது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது! பல் ஊடக செய்தியாளர்களை நியமிப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்பணிக்கு இந்தி கட்டாயம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். அதே நேரத்தில் பகுதி நேர செய்தியாளர்களை நீக்கக்கூடாது. அவர்களை படிப்படியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 மத்திய அரசுக்கு தமிழக எம்.பி கடிதம்

மத்திய அரசுக்கு தமிழக எம்.பி கடிதம்

அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசின் தன்னிச்சைக்கு ஏற்கனவே கடும் கண்டனம் எழுந்தது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+