Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டகாசம்! தமிழக மீனவர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம்! அரசுக்கும் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்ததற்கு, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைதான மீனவர்களை விடுவிக்க மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.

மேலும், தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப் படகுகளை பறிமுதல் செய்வதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த தொடர் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு மத்திய - மாநில அரசுகளுக்கு மீனவ சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

 8 தமிழக மீனவர்கள் கைது

8 தமிழக மீனவர்கள் கைது

அந்த வகையில், நாகை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். இந்த தொடர் கைது நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிங்களக் கடற்படைக்கு கண்டனம்

சிங்களக் கடற்படைக்கு கண்டனம்

இந்நிலையில், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்ததற்கு, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வங்கக் கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

மீண்டும் கைது நடவடிக்கை

மீண்டும் கைது நடவடிக்கை

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அடுத்த இரு நாட்களில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 7-ஆம் தேதி, கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுதலையான நிலையில், அடுத்த கைது அரங்கேறியிருக்கிறது

நிரந்தர தீர்வு வேண்டும்

நிரந்தர தீர்வு வேண்டும்

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், தொடர்ந்து கைது செய்யப்படுவதால் மீனவர்கள் அச்சத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+