கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. 22 ரக "துருப்பிடித்த" கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர்
சென்னை: கோயமுத்தூர் விமான நிலையத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியைப் பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல். இவர் பட்டாம்பி நகராட்சி முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

இன்று காலை தாங்கல், கோயமுத்தூரில் இருந்து பெங்களூர் வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். இன்று காலை 6 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு தாங்கல் வந்தபோது, தாங்கலின் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனையில் தாங்கல் கொண்டு வந்த பையில் துப்பாக்கி ஒன்றும் , ஏழு தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கைத்துப்பாக்கி துருப்பிடித்த நிலையில் பயன்படுத்தமுடியாதபடி இருந்ததாகத் தெரியவந்துள்ளது. தாங்கல் வைத்திருந்த துப்பாக்கி 22 ரக கைத்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. மேலும் துப்பாக்கியோடு 7 புல்லட்டுகளும் அதோடு இருந்துள்ளது. துப்பாக்கிக்கு உரிய அனுமதி இல்லாத நிலையில் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயண அவசரத்தில் கைத் துப்பாக்கியைத் தெரியாமல் எடுத்துவந்ததாக தாங்கல் தெரிவித்திருக்கிறார்.

முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் தாங்கலிடம் பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாங்கல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பட்டாம்பு நகராட்சி முன்னாள் தலைவரான தாங்கல் செயல்பட்டிருக்கிறார். மேலும் இவர் பட்டாம்பியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அரசியல் ரீதியாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுமா என்பது அடுத்தக்கட்ட விசாரணையில்தான் தெரியவரும்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்வர். விமான நிலையத்தில் ஒருவர் காலை வேளையில் கைத்துப்பாக்கியுடன் வந்ததும் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications